I'm always "Squabble with Rife"

Saturday, May 31, 2014

வயிற்றில் பூச்சி தொல்லை

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து,  உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது. 

வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது. 

Friday, May 30, 2014

அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம்!

அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு. மஞ்சள் நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா...? சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது. மல்லி மணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது. சீரகம் தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம். கசகசா கரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும். மிளகு மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். கிராம்பு மட்டன் குழம்பை மணக்க வைப்பதில் மட்டுமல்ல... கிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.

Thursday, May 29, 2014

விவேகானந்தர் பொன் மொழிகள்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு
நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.
செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.
மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.
மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.
கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.
தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.
உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.
இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.
நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?
உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.
முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.
பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.
எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.
சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.
பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.
கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.
ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.
ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.
இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.
மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.
ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?
நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய மூளயல் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.
ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.
நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.
எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.
இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.
இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.
மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.
வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.
நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.
நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.
பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.
சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.
அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.
தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.
இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.
எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.
இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.
--
விவேகானந்தர்

Wednesday, May 28, 2014

கண் பாதுகாப்பு

யோகாவின் மூலம் நாம் கண்களை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து சென்னையிலுள்ள அகர்வால் கண் மருத்துவமனை, கவர்னர் திரு. ராம்மோகனராவ் அவர்களை அழைத்து திறப்பு விழாவினை நடத்தியுள்ளது. கண்களை பாதுகாப்பில் ஆச்யோதன - அஞ்சன - தர்ப்பண புடபாகம் போன்ற முறைகள் மிகவும் சிறந்தவை என்று ஆயுர்வேதம் உபதேசித்திருக்கிறது?
திரவமான மருந்தை கண்ணில், சிறிது தாரையாக ஊற்றுவது ஆச்யோதன எனப்படும். கண் நோய் எல்லாவற்றிலும் முதலில் ஆச்யோதனம் பிரயோகிக்க ஏற்றது. ஆச்யோதனம் கண்ணில் உண்டாகும் வலி, குத்தல், அரிப்பு, உறுத்தல், நீர்க்கசிவு, எரிச்சல், சிவப்பு ஆகியவற்றைப் போக்கும்.
ஆச்யோதனம் வாத நோய்களில் உஷ்ணமாகவும், கபநோய்களில் சிறிது உஷ்ணமாகவும், ரத்தத்தாலும், பித்தத்தாலும் உண்டாகும் நோய்களில் குளிர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
ஆச்யோதனத்தை பிரயோகம் செய்வதற்கென முறை உள்ளது. அதிகக் காற்றோட்டமில்லாத, இடத்தில் உட்கார்ந்து நோயாளியின் கண்ணை வைத்தியர், இடது கையால் பிரித்து வலதுகையால் கிளிஞ்சிலிலிருந்து திரிபோல் தொங்குகின்ற பஞ்சின் வழியாக, 10 அல்லது 12 துளிகள் மூக்கை ஒட்டிய கண் பாகத்தில் இரண்டு அங்குல உயரத்திலிருந்து விழும்படி செய்ய வேண்டும். பிறகு மிருதுவான வஸ்திரத்தால் கண்களை துடைத்து விடவேண்டும். கபம் அல்லது வாயுவால் உண்டான நோய்களில் இளம் சூடான வெந்நீரில் நனைத்த வேறு வஸ்தீரத்தால், மிருதுவாக வியர்வை உண்டாக்கவேண்டும். ஆனால் பித்தத்தாலும் ரத்தத்தாலும் ஏற்ப்பட்டுள்ள கண் நோய்களில் ஒற்றடம் செய்யக்கூடாது.
இவ்வாறு கண்ணில் இடப்பட்ட மருந்து கண்ணில் இணையும் பகுதிகள், தலை, மூக்கு, முகம் ஆகியவற்றின் உள்ளே அமைந்துள்ள குழாய்களில் பரவி, கழுத்துக்கு மேற்பட்ட பகுதியில் உண்டான நோய்களை நீக்கும்.
அஞ்சனம் என்றால் மையிடுதல், உடலை சுத்தம் செய்து கொள்ளும் முறைகளான வாந்தி, பேதி, வஸ்தி, நஸ்யம் (மூக்கில் மருந்து) போன்றவற்றை செய்து கொண்டவருக்கு, கண்களில் மட்டும் தோஷங்கள் பழுத்த நிலையில் அஞ்சனம் அனுமதிக்கப்படுகிறது. அந்தநிலையில் காணப்படும் குறிகளாகிய வீக்கம், அதிக அரிப்பு, பிசுபிசுப்பு, உறுத்தல், கசிவு, சிவப்பு இவை மந்தமாயிருத்தல், பீளை அதிகரித்தல், பித்தம், கபம், ரத்தம் மற்றும் விசேஷமாக வாயுவால் ஏற்பட்ட நோய்கள் ஆகியவற்றில் அஞ்சனம் பிரயோகிக்கலாம்.
அஞ்சனம் மூவகைப்படும். லேகனம் (கரைப்பது) , ரோபணம் (ஆற்றுவது) , பிரஸாதனம் (தெளிவுறுத்துவது) என அஞ்சனம் மூவகைப்படும்.
துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவை உள்ள பொருள்களால் லேகானஞ்சனம்) கரைக்கும் மை தயாரிக்க வேண்டும்.
கசப்பான பொருள்களால் (ரோபண அஞ்சனம்) ஆற்றுந் தன்மையுள்ள மை தயாரிக்க வேண்டும்.
இனிப்பு, குளிர்ச்சி பொருந்திய பொருள்களால் (பிரஸாதன அஞ்சனம்) தெளிவு உண்டாக்கும் மை தயாரிக்க வேண்டும்.
தீட்சணமான அஞ்சனத்தை பிரயோகித்தால் கண் கஷ்டப்படும் போது உபேயாகிக்கப்படும் பிராஸதாஞ்சனம் எனப்படும் இது, சூர்ணாஞ்ஜனமாகும்.
அஞ்சனமிடும் (சலாகை) குச்சி பத்து அங்குல நீளமும் (மொச்சைக் கொட்டை பருமனும் இடையில் மெல்லியதாகவும், நுனி புஷ்ப மொட்டுப் போலவும், குச்சி அமைந்து இருப்பது சிறப்புள்ளதாகும். கரைக்குந் தன்மையுள்ள அஞ்சனமிட - தாமிர சலாகையும், ஆற்றுந்தன்மையுள்ள அஞ்சனமிட - இரும்பு சலாகையும், விரலும், தெளிவுறச் செய்யும் அஞ்சனமிட - தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட சலாகையும் ஏற்றதாகும்.
கண்ணில் எழுதப்படும் மை உருவத்தால் (பிண்டம்) குளிகை, ரஸக்ரியை (அதிக தடிப்பின்றி தேன் போன்றது) , சூர்ணம் (பொடி) என மூவகையாகும். தோஷம் அதிகமாயிருக்கும் பொழுது - பிண்டாஞ்சனத்தையும், தோஷம் நடுத்தரமான அளவில் - ரஸக்ரியையும், குறைந்திருக்கையில் - சூர்ணாஞ்சனத்தையும் பிரயோகிக்க வேண்டும். இரவில் தூங்குதல், பகலில் பானம், உணவு, சூர்ய கிரணங்களால் தளர்ந்துள்ள கண்களில் அஞ்சனமிடக்கூடாது. இது போன்ற நிலைகளில் கண்ணில் மை இடுவதால் தோஷங்கள் அதிகமாகி, கண்நோய்கள் உண்டாகும். அதனால் எப்பொழுதும் காலை மாலை நேரங்களில் அஞ்சனமிட வேண்டும். சூரியன் மேகங்களால் மறைக்கப்படாத நிலையில் அஞ்சனமிட வேண்டும்.
பகலில் சூடான மருந்துகளால் செய்யயப்பட்ட கண்மையை எழுதக்கூடாது. ஏனெனில் அதன்மூலம சுத்தம் செய்யப்பட்ட கண்கள், சூரியனைக் கண்டு மேலும் துன்புறும். சூடான வீர்யத்தைக் கொண்ட கண்மையை இரவில் குளிர்ச்சியான நேரமாக இருப்பதால் எழுதலாம்.
உலோகம் (இரும்பு) கல்லிலிருந்து உண்டாகிறது. உலோகப்பொருள் கல்லால் கூராக்கப்படுகின்றது. உலோகக் கருவிகள் கல்லால் மழுங்கிவிடுகின்றன (பலனற்றுப் போகின்றன)
அவ்வாறே பஞ்சமஹாபூதங்களில் தேஜஸால் கண்கள் உண்டாகின்றன. சூர்யன் என்ற தேஜஸால் கண்ணுக்கு பார்க்கும் சக்தி உண்டாகிறது. அதிக உஷ்ணத்தால் கண்கள் பாழாகி விடுகின்றன.
கண்மையை இட்டவுடன், கண்களை மூடிக்கொண்டு விழிகளை உள்ளே மெதுவாக சுற்ற வேண்டும். கண் இமைகளை சிறிது அசைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சூடான குணத்தைக் கொண்ட கண்மை கண்களில் வெகு விரைவில் பரவும். கண்களை திறந்து மூடுவதோ, இமைகளை அழுத்தித் தேய்ப்பதோ, கண்களை அலம்புவதோ செய்யக்கூடாது.
மருந்தின் வேகம் குறைந்து கண்கள் அமைதியான நிலையை அடைந்தவுடன் நோய், தோஷம், காலம் இவற்றிற்கேற்ப ஜலத்தால் கண்களை அலம்ப வேண்டும். பிறகு வைத்யன் வலது கை கட்டை விரலில் துணியை சுற்றிக் கொண்டு நோயாளியின் இடது கண்ணை மேல் இரைப்பையை பிடித்துக் தூக்கி கண்களை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அவ்வாறே இடது கையால், நோயாளியின் வலது கண்ணைத் திறந்து சுத்தம் செய்ய வேண்டும். கண்களை திறந்து சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் கண்மை இமைகளில் தங்கி பல நோய்களை உண்டாக்கும்.

Tuesday, May 27, 2014

தியானத்தின் பலன்கள்:

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.
  •  தியானத்தின் பலன்கள்:

    Ø  ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
    Ø  இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
    Ø  உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
    Ø  உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
    Ø  நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
    Ø  உடல் எடையை குறைக்கலாம்.
    Ø  உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
    Ø  உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
    Ø  தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
    Ø  மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
    Ø  ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    Ø  தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
    Ø  மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
    Ø  பேராசையை தவிர்க்கும்.
    Ø  உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
    Ø  கண்பார்வை அதிகரிக்கும்.
    Ø  அமைதியான மன நிலையை கொடுக்கும்.
    Ø  மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
    Ø  முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
    Ø  மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
    Ø  போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
    Ø  ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
    Ø  சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
    Ø  புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
    Ø  எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
    Ø  லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
    Ø  ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
    Ø  எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
    Ø  நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
    Ø  நண்பர்கள் வட்டம் பெருகும்.
    Ø  தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
    Ø  சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
    Ø  கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
    Ø  மன அழுத்தம்மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
    Ø  சமூக அக்கறை அதிகரிக்கும்.
    Ø  எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
    Ø  தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள், படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
    Ø  தூக்கத்தில், கண்ட கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து  நிம்மதியாக தூங்க முடியும்.
    Ø  மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
    Ø  மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
    Ø  மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
    Ø  தற்காப்பை உருவாக்கும்.
    Ø  வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
    Ø  வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
    Ø  இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
    Ø  ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
    Ø  நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
    Ø  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
    Ø  உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
    Ø  இதய நோய்களை கட்டுபடுத்தும்.
    Ø  உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
    Ø  வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
    Ø  தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
    Ø  ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
    Ø  தீய பழக்கங்களை ஒழிக்கும்.
    Ø  நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    Ø  கற்பனை திறன் அதிகரிக்கும்.
    Ø  மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
    Ø  உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
    Ø  உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
    Ø  பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
    Ø  உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
    Ø  கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.

Monday, May 26, 2014

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்புகள்

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். 

மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மட்டுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல், பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. 

அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒன்று எது என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். 

மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் வகைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம். 

துவரம் பருப்பு.......... துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் இயக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம். 

பாசிப்பருப்பு........... பாசிப்பருப்பில் வைட்டமின் `ஏ, பி, சி, ஈ' மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். 

பச்சை பயறு............ இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமான மடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும் 

கொண்டைக் கடலை......... கொண்டைக் கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும். 

மைசூர் பருப்பு........... மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும். 

சுண்டல்...... கொண்டைக் கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும். 

கடலைப் பருப்பு........... கடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது. 

சிவப்பு காராமணி............ சிவப்பு காராமணியில் `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. 

ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. 

தட்டை பயறு...... தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். 

உளுத்தம் பருப்பு...... இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.

Sunday, May 25, 2014

கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!

கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல்லானது பயன்படுத்தப்படுகிறது. மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். இதுப்போன்று வேறு: ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!! சரி, இப்போது கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம். சருமத்தின் கருமையை போக்கும் வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.முதுமை தோற்றத்தைத் தடுக்கும் தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம். பருக்கள் பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும். நகப் பராமரிப்பு நகங்கள் அடிக்கடி உடைகிறதா? அப்படியானால் கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும். அருமையான சன் ஸ்க்ரீன் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும். பொலிவான சருமம் சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யுங்கள். உதடு வறட்சியை தடுக்கும் கற்றாழையின் அழகு நன்மைகளில் ஒன்று தான் உதடு வறட்சியைத் தடுப்பது. உதடுகள் வறட்சியடைந்து, உதட்டின் அழகே கெடுகிறதா? அப்படியானால் இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம். அழகாக கண்கள் கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.

Saturday, May 24, 2014

ஐவகை நந்திகள் ..

.1கைலாச நந்தி
.2 அவதார நந்தி
.3 அதிகார நந்தி
.4 சாதாரண நந்தி
.5 பெரிய நந்தி

கைலாச நந்தி
கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

அவதார நந்தி
அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

சாதாரண நந்தி
சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

பெரிய நந்தி
தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி
பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

Friday, May 23, 2014

ராத்திரி ஆரோக்யம்

இ ன்று வாழ்க்கை முறை விசித்ரமான நிலைமையை அடைந்து கொண்டிருக்கிறது, உத்யோகத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பகலில் உறங்கி இரவில் வேலைக்கும் செல்வோர் பலர். Night shift என்று கூறி எத்தனை போலீஸ்காரர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், தொழிற்சாலை ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோர் உடலைப்பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை காப்பாற்ற உழைக்கிறார்க!ரவில் கண் விழித்து பகலில் தூங்குவது என்பது ஆரோக்யத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். கேட்டால், என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்புக்காக இப்படி செய்ய நேரிடுகிறது என்கின்றனர். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீட்டிற்கு வருபவர் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே ஆனால் அதிலும் பலர் ராத்திரியில் வெகுநேரம் கண்விழித்து உணவின் சுவைகூட அறியாத வகையில் தொலைக்காட்சி அல்லது கேளிக்கைகளில் மனதைச் செலுத்தி தற்காலிக சுகத்தை நிரந்தர சுகமாகக் கருதி இரவின் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர்.
ராத்திரியிலும் மனிதனால் ஆரோக்யத்தை பெற முடியுமா? என்றால் பதில் முடியும்தான் எப்படி என்பதை சற்று ஆரோய்வோம், முதலில் உணவின் கார்யத்தி -ல் சிரத்தை வேண்டும். மாலையில் சந்தியாகாலம் போய் இரவு கவ்வியவுடன் அதிகம் தாமதிக்காமல் எளிதில் ஜீர்ணமாகக் கூடிய உணவை சூடாக சாப்பிட வேண்டும். இதற்கு வடிகஞ்சி, பார்லி கஞ்சி, கூழ், சாதம், போன்றவை பயன்படும்.
ஒரு டம்பளர் (250 கிராம்) அரிசிக்கு, 20 டம்பளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி சூடாக சிறிது நெய் கலந்து. 2-3 டம்பளர் அளவில் குடிப்பதால் நாம் பெறும் பயன்கள் - வாதத்தை இயற்கை நிலைக்குக் கொண்டு வருதல், நாவறட்சி, உடல் வாட்டம், எளிதில் ஜீர்ணமாகுதல், தாதுக்களை சமமாக்குதல், தசை நார்களை மிருதுவாக்குதல், வியர்வையையுண்டாக்குதல் போன்றவையாகும்.
ஒரு டம்பளர் புழுங்கலரிசியில் 14 டம்பளர் தண்ணீர் விட்டு நன்கு அரிசி வேகும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி சூடாக சிறிது நெய் கலந்து குடிப்பதால் பசி, தாகம், உடல் வாட்டம், உடல் இளைப்பு, வயிற்று நோய், ஜ்வரம் இவற்றை நீக்கும். மலத்தை எளிதில் வெளிப்படுத்தும், பத்தியமானது, பசியை நன்கு தூண்டும். எளிதில் ஜீர்ணமாகிவிடும்.
1:8 என்ற விகிதத்தில் அரிசியும் தண்ணீரையும் கொதிக்கவிட்டு, தண்ணீருடன் அரிசியை குழைத்து கூழாக்கிக் குடித்தால் - மலத்தைக்கட்டும், மனதுக்குகந்தது, நாவறட்சியை போக்கும், பசியைத் தூண்டும், நன்மை பயப்பது, புண்கள், கண்நோய், உடல் இளைப்பு ஆகியவற்றை குணப்படுத்தும்.
1:4 என்ற விகிதத்தில் அரிசியும் தண்ணீரும் கலந்து வேக வைத்து, கஞ்சியை வடித்து, சாதத்தை சூடாக பயத்தம் கஞ்சி, கொள்ளு ரசம் அல்லது உளுத்தம் கஞ்சி, நெல்பொரிக்கஞ்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் சிறிது நெய் கலந்து சாப்பிட எளிதில் ஜெரித்து விடும். அரிசியை வறுத்து சாதம் வடிப்பது மிக எளிதில் ஜெரித்து விடும். பிறகு நூறடி நடந்து இடதுபக்கம் சரிந்து படுக்க வேண்டும்.
இப்படி இதமான உணவை உட்கொண்டு அமைதியான மனதுடன் சுத்தமாக இருந்து, ஆண்டவனை நினைத்துக் கொண்டு தனது படுக்கைக்குச் செல்ல வேண்டும். இன்று மனிதர்களில் பலர் பணத்தை விட அன்பிற்கும் அமைதிக்கும்தான் ஏங்குகின்றனர். பணம் இவ்விரண்டையும் ஒருவருக்கு சம்பாதித்துத் தந்தால் அவருடைய தன சம்பாத்யம் பூரண பலனைத் தருவதாகத்தான் எண்ண வேண்டும். வீட்டில் குழந்தைகளிருந்தால் அவர்களை கொஞ்சி மகிழ்வதும், உறவினர் மற்றும் நன்பர்களிடமும் தூய அன்பை வெளிப்படுத்தத் தெரிந்தவருக்குத்தான் அன்பும் அமைதியும் ஒருங்கே பெற்றவராவார்.
படுக்கச்செல்லும் முன் அன்று நடந்த நிகழ்ச்கிளை வரிசைப்படுத்தி மனதில் கொண்டு வந்து தான் செய்த தவறுகளையும் நன்மைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தவறுகளை இனி செய்வதில்லை என்ற திடமான எண்ணத்துடன் படுக்கச் செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் கூறுவார்கள். ERR is Human, No Man is Infaliable (without mistakes) என்று.
நமது படுக்கையறை சுத்தமா இருக்க வேண்டும், காற்றோட்டத்துடன் கூடிய நறுமணமான படுக்கை அறை நல்ல தூக்கத்திற்கு வித்திடுகிறது- அடுத்தவர் மேல் இடித்துக் கொண்டு படுக்கும் அளவுக்கு அதிக நபர்களுடன் கூடிய அறையில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.
குப்புறப்படுத்தல் தவறான Posture ஆகும். இடது பக்கம் சரிந்து படுத்தலே நலம் தரும், தலையை வடக்கு நோக்கி வைக்காமல் கிழக்கு அல்லது தெற்கு திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்.
நவீன மருத்துவர்களின் கூற்றான தலையணையை தவிர்த்து படுப்பதால் தலைக்கு ரத்த ஓட்டம் சீராகயிருக்கும் என்ற கருத்தை ஆயுர்வேதம் ஆமோதிக்காது. அதிக உயரமான தலையணை வைக்காமல் தோள்ப்பட்டையும் தலையும் சமமாக வரும்படியான தலையனை வைத்து உறங்க வேண்டும், படுக்கை நன்கு பரப்பப்பட்டு, மேடு பள்ளமில்லாத, மெத்தென, இலவம் பஞ்சு அடைத்த முழங்கால் உயரமுள்ள கட்டிலில் விரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இடுப்பு வலியுள்ளவர்கள் தரையில் கோரைப்பாயில் கம்பளி விரிக்கப்பட்டு அதன்மேல் மல்லாந்த நிலையில் கால்களை நன்கு நீட்டி படுக்க வேண்டும். இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள Disc Bulging, Prolapse `போன்றவை இவ்வகை படுக்கை மூலம் குறைய வாய்ப்புண்டு.
நம்மை விட வயதில் பெரியவர், தாய் தந்தையர், உறவினர், நம்மிலும் மேன்மையானவர் போன்றவர்களுக்கு எதிரில் கால் நீட்டாமல், கெட்ட கனவுகளுக்கு இடம் தராமல் தர்ம சிந்தனையுடன் உறங்க வேண்டும். படுத்த பிறகுதான் பலர் அரட்டையில் இறங்குகின்றனர். இது தவறாகும். "சுப ராத்திரி" என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டபிறகு ஏதும் பேசாமல் அமைதியாக உறங்கும் வழக்கத்தை பழகிக் கொள்ள வேண்டும்.

Thursday, May 22, 2014

வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு

வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு



நீண்ட நேரம் நின்று பணிபுரியும் பெரும்பாலானவர்களுக்கு வெரிகோஸ் வெயின் என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. அதுபோல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு




சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.

நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளிவரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும் அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ( அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)





முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,

முக்கிய குறிப்பு:

பரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.

48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

Wednesday, May 21, 2014

பழங்களின் பலம்

எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம்!


 உடல் பருமன்          முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.

சர்க்கரை நோய்  தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.

வயிற்று குடல் புண் மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.


மாதவிடாய்க் கோளாறுகள்    வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.


ஆஸ்துமா கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.

ஆஸ்டியோபொராசிஸ் பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.

ரத்தசோகை பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம்.

மலச்சிக்கல் பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.

சிறுநீரகக் கல் புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.

மூலம் பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.

ஹெர்னியா: முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள். 

நரம்புக் கோளாறுகள்: கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.

************************

Tuesday, May 20, 2014

கொய்யா மருத்துவம்

விலை மலிவான பழங்களிலும் நிறைய சத்தும், மருத்துவக் குணங்களும் உண்டு. விதை நீக்கப்பட்ட கொய்யா இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியுடையது. மலச்சிக்கலை நீக்கும் மகத்தான பழம் கொய்யா. விக்கல் வந்தால் கொய்யாபழம் உண்ணுங்கள் விக்கல் உடனே நிற்கும். இதில் வைட்டமின் 'சி' மிகுதியாக உள்ளது. இதைத்தவிர 'ஏ', 'பி', வைட்டமின்களும் உள்ளன. ஒரு அவுன்சு பழத்தில் 1 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்புச் சத்து, 3 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து, 4.1 கிராம் கார்போஹைட்ரேட், 0.3 கிராம் இரும்புச் சத்தும் உள்ளது. கொய்ய பிஞ்சிற்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு. கொய்யா இலையைக் கஷாயம் வைத்துப் பருகினால் வாந்தியும், பேதியும் நிற்கும். இந்த இலையை வாயிலிட்டு நன்கு மென்று வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும். கடும் பல்வலிக்கு இப்படி அடிக்கடி செய்தால் பலன் கிடைக்கும். கொய்யா இலை கொழுந்தை உண்டால் நன்றா பசி எடுக்கும். குடல் வலுப்பெறும். அஜீரணத் தொல்லைகளுக்கு இலைக் கொழுந்தைப் பறித்து கழுவிச் சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணம் தெரியும். கொய்யாப்பழத்தை சாப்பிடும்போது அதனை தோல் நீக்கிச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் தோன்றும். மேலும் தோலோடு சாப்பிட்டால்தான் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெறமுடியும்.

Monday, May 19, 2014

திருவள்ளுவர்


‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்
பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய
பணி: புலவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
  • பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
  • இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அவர் இயற்றிய வேறு நூல்கள்
திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.