I'm always "Squabble with Rife"

Sunday, October 19, 2014

உணவே மருந்து

மூலிகை பானம் செய்முறை
இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.
காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை பானம் செய்முறை..
தேவையான மூலிகை பொருட்கள்:
1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.
5.அருகம் புல் 
இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.
நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து  தினமும் காலையில் சாப்பிட்டு வரலாம்.
காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.
இந்த அருகம்புல் பானத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.
உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.
குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.


********

Wednesday, October 15, 2014

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

பழமொழி: "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

விளக்கம்:

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

Tuesday, October 14, 2014

முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி

அலாரம் அடிக்க எழுந்து பரபர சமையல், ஸ்கூல், ஆபீஸ் வழியனுப்பல்கள் முடிந்து வாகனப் பயணம். அலுவலகத்தில் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்ததில் இருந்து ஷட்-டவுன் பண்ணும் வரை ஸ்டைலிஷ் சேரில் சுழன்றபடி வேலை. ‘சும்மா இருக்கேன்’ என்ற வார்த்தையை இப்போது மைக்ரோ ஒலி வாங்கி வைத்துக் கேட்டாலும் கிடைக்காது. எல்லாரும் எப்பவும் பிசி. உடல் என்ற மெஷினில் எங்காவது வலிக்கும் வரை அப்படி ஒரு மெஷினைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வுகூட மிஸ்ஸிங். வீட்டுப் பொறுப்புகள் முடித்து அக்கடானு ரிமோட்டைத் தட்டி வீட்டு சோபாவில் அமரும் இரவு 11 மணிக்கு பேக் பெயின் பின்னியெடுக்க சரியாக தூக்கம் பிடிக்காமல் விடிகிறது அடுத்த காலை. தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் நபர்களின் 99 சதவீதத்தினருக்கு பேக் பெயின் பிரீ கிப்ட். பெண்களுக்கும் பேக் பெயினுக்கும் அவ்ளோ நெருக்கம். ஏன் வருகிறது பேக் பெயின்? நம் உடல் இயக்கத்தில் முக்கியப் பங்கு எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் உண்டு. இந்த சிஸ்டத்தில் பிரச்னை வருவது தான் உடல் நோய்களாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேக் பெயினை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையை குனிந்து தம் கட்டித் தூக்குவதால் வரலாம். தொப்பை பெரிதாகிக் கொண்டே போகும் போது அதை தாங்கிக் கொண்டிருக்கும் முதுகு எலும்பு வளைகிறது. இதனாலும் பேக் பெயின் வரும். 30 வயதைத் தாண்டிய பலரும் பேக் பெயின் பேஷன்ட்தான். கூன் போட்டு உட்கார்ந்தபடி பலமணி நேரம் இருப்பதும் இப்பிரச்னையை உருவாக்கும். பின்புறம் குறைந்த அளவு சாய்வு மற்றும் சாய்வே இல்லாத சேர்களை பயன்படுத்துவதும் பேக் பெயினை உருவாக்கும். பேக்பெயின் வராமல் வேலை பார்க்க முடியுமா? வேலையிடத்தில் முதலில் நீங்கள் அமரும் சேரை கவனிக்கவும். பின்புற சாய்வு தோள் வரை நேராக இருக்கட்டும். குனிந்து கூன் போடாமால் நிமிர்ந்து அமர்ந்து வேலை பாருங்கள். லேசாக தொப்பை விழ ஆரம்பிக்கும் போதே டயட்டில் கவனம் செலுத்தி உடல் எடையை குறைப்பது நல்லது. சேரில் அமர்ந்து கால் தொங்கிக் கொண்டிருக்காமல் கீழே வைக்கவும். உயரம் குறைந்தவர்கள் கால் வைக்க புட் ஸ்டூல் வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க நேர்ந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து கொஞ்சம் நடக்கலாம். இத்துடன் எலும்புக்கு வலிமை சேர்க்கும் உணவுகளை டயட்டில் சேர்க்கவும். பேக் பெயினுக்கும் பெண்களுக்கும் அப்படி என்ன நெருங்கிய உறவு? பொதுவா பேக் பெயின் பெண்களுக்கு அதிகம் வருகிறது. பூப்பு எய்திய பின்னர் பீரியட்ஸ் டைமில் எலும்புகளில் வலி பின்னியெடுக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் உளுந்துக் கஞ்சி, உளுந்துக் களி உணவில் சேர்க்கப்பட்டது. ஆனால் இப்போது இருக்கிற டீன்ஏஜ்கள் உளுந்துக் கஞ்சி என்றால் ‘உவ்வே’ சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் சேர்க்காவிட்டால் இளம் வயதிலேயே பேக் பெயின் இலவசமாகக் கிடைக்கும். குழந்தைப் பேற்றின் போது இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து பின்னர் எலும்புகள் பழைய நிலைமைக்கு வரும். அந்த சமயத்திலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 35 வயதுக்கு மேல் எலும்பு தேய்மானம் துவங்கும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதுக்கு மேல் உணவில் கேழ்வரகு, பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை, சோயாபீன்ஸ் ஆகியவை கட்டாயம் சேர்க்க வேண்டும். புரூட்டி மில்க் ஷேக் ஒரு கப் பாலுடன் ஒரு பச்சை வாழைப் பழத்தை சேர்த்து அடித்துக் கொள்ளவும். மாதுளையை உரித்துப் போட்டு வெல்லம் சேர்த்து லேசாக அடிக்கவும். மாதுளை லேசாக மட்டுமே உடைந்திருக்க வேண்டும். இந்த கிரஞ்சி மில்க் ஷேக் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பீட்ஸ் உருண்டை கேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து மாவை பதமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவில் பாதாம், முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர்க்கவும். அத்துடன் சுவைக்கு வெல்லத்தைப் பொடித்து சேர்க்கவும். கொஞ்சம் பால் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து பீட்ஸ் உருண்டை தயாரிக்கலாம். பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சையில் அடங்கியுள்ள பாஸ்பரஸ் கால்சியம் சத்தை எலும்பு எடுத்துக் கொள்ள உதவுகிறது. உளுந்து கஞ்சி உளுந்தை ஊற வைத்து நன்றாக ஆட்டி, கொதிக்கும் தண்ணீரில் விட்டு லிக்விட் பதத்தில் உப்பு சேர்த்து கஞ்சி வைப்பது பலரும் அறிந்ததே. கஞ்சியில் வாழைப்பழத் துண்டுகள், கட் செய்யப்பட்ட ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்துக் கொடுத்தால் சுவையும் சத்தும் கூடுதலாகும். இஞ்சியில் வெல்லம் சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும். பெரியவர்கள் உளுந்து கஞ்சியில் வெள்ளரித் துண்டுகள், வேக வைத்த பூசணி, கேரட் துண்டுகள் சேர்த்து சாப்பிடும் போது சுவை வேறுபடுவதுடன் எலும்புகள் வலிமை அடைவதற்கான சத்துகள் கிடைக்கும். எலும்புக்கு பிடித்த டயட் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். சில குழந்தைகள் பால் குடிப்பதைத் தவிர்க்கும். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மற்றும் ஐஸ் கிரீமாக கொடுக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை கட்டாயம் சேர்க்கவும். அதே போல் எலும்பு உறுதிக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்துடன் வைட்டமின் டி சேர்க்கவும். உணவில் கிடைக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கிடைக்கிறது. குட்டிக் குட்டி மீன் முட்களில் கால்சியம் இருக்கிறது. அதை அப்படியே மென்று சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம் கிடைக்கும். வெஜிடபிள் ஆயிலில் வைட்டமின் டி உள்ளது. சோயா பீன்ஸ் ஆயிலையும் பயன்படுத் தலாம். வலிக்கு தீர்வு என்ன? உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றை கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும். எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகள் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தனது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வரு வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க லாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம். சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வீட்டில் செய்யலாம். நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்க வேண்டும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்க வேண்டும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்து படுப்பதை விட ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாய் வலம் வரலாம். பாட்டி வைத்தியம் ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலிகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நி வாரணம் கிடைக்கும். ஆல மர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும். உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். கொய்யாப் பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறும். முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும். வன்னி மர இலையை அரைத்து வலி உள்ள இடத்தில் பத்துப் போட்டால் வலி குறையும். வாதநாராயணக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, மற்றும் கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும். வாதநாராயணக் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும். சுக்கு, தனியா, வெந்தயம், வெல்லம், தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=825#sthash.OXc2j80v.dpuf

Monday, October 6, 2014

Sim card நம்பரை தெரிந்து கொள்ள



உங்களிடம் இருக்கும் Sim card நம்பரை தெரிந்து கொள்ள 



Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#


Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#


Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#



Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#



Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#



Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#



Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள்
*1#


Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#



Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் 
*1#



Wednesday, October 1, 2014

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்

சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். தினமும் 100 மில்லி கஷாயம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 நாளைக்கு ஒருமுறை புதியதாக கஷாயத்தை தயாரித்து வைத்து கொள்ளலாம். சர்க்கரை நோயை பொருத்த வரை உணவு முறை முக்கியமான ஒன்று.வழக்கமாக அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இரவில் உணவின் அளவை பாதியாக குறைத்து கொள்ள வேண்டும். உடல் கட்டுப்பாடுக்கு ஏற்ப 20 முதல் 30 நாட்களுக்கு கஷாயத்தை தொடர்ந்து குடித்து வரவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்: மா இலை, அத்தி இலை ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும். உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்க போகும் முன் தடவி வந்தால் நோய் குணமாகும். பகல் நேரங்களில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் குணமாகும். நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையும். அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறைகிறது. இந்த நோயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வராவிட்டால் குளுகோஸூம், கொழுப்பும் உடலில் அதிக நேரம் தங்கி இருந்து உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். இதை தடுக்க பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், உடலில் இன்சுலின் அதிகளவில் சுரக்கும், கெட்ட கொழுப்புகளின் அளவும் குறையும். நீரிழிவு நோயாளிகளின் உடல் பருமன்: பாதாம் பருப்பை போல இதர கொட்டை பருப்புகளும் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக ஆய்வின் கூறப்படுகிறது. பாதாம் மற்றும் மற்ற கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுகின்றன. பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை அண்டாது.