I'm always "Squabble with Rife"

Monday, March 31, 2014

ஆண்களுக்கான அழகு குறிப்பு

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து


பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் 
செலுத்துவதில்லை..அது ஏன் என்றும் புரியவில்லை...(இயற்கையிலே அவங்க அழகாக 
இருப்பதாலோ???)ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக
வெளியுலக தொடர்பு இருக்கு.அவர்கள் தான் வெயில்,மழை,தூசியிலும் 
செல்வார்கள்.ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு
கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம்
ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை 
பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் 
மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.

வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்..வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்


முக அழகுக்கு:
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள்.வீட்டுக்கு
வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் 
டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் 
கொடுக்கவும்.இதனால் முகம்
தெளிவடையும்.இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் 
மஞ்சள் கருவை (மூக்கை மூடிக்கொள்ளவும்)எடுத்து அதில் 
பாலாடையும்,பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும்.பிறகு 
இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி 
பளபளப்பாக மாறிவிடும்.இது மாசம் 2 முறை செய்யவும்.

தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும்.
பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில்
தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக
மறைந்துவிடும்.



உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு,
அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள்
சிகப்பாக மாறிவிடும்.(தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை 
தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்



கூந்தலுக்கு:
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், 
தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு 
குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி 
பூ இதனை காய வைத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு 
தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம்.
சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக
பயன்படுத்த வேண்டாம்.

ஆடை
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது

நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக
இருக்கும்




சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக t-shirt
அணிந்தால்,கேஷுவலாகவும்,கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க,பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்


ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் 
எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் 
நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..




உள்ளாடைகள்
உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான 
உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை 
எப்பொழுதும் நல்லது.

கல்லுரிக்கு போகும் ஆணா நீங்கள்
t-shirt போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட்
போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் 
மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், 
அசத்தலாக இருக்கும்.

இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் 
செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் 
பெண்களுக்கு பிடிக்காது.

வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.

உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் 
நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும்,பிறர் மீது அதிக கோபமோ, 
பொறாமை படுவது உங்களின் முக அழகை கெடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக 
இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க... 




ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து

*ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் *
அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.

*முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்*
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில 
நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், 
சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது 
தடவிவரவும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம்
அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்

*முகம் வரட்சியினை போக்க:*
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம்
ஒருமுறை பூசி வரலாம்.

ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வரட்சி மாறும்.

வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.

கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் 

Sunday, March 30, 2014

கண்கள் ''ப்ளிச்'' ஆக... ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்...

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்..... 

கண்கள் ''ப்ளிச்'' ஆக... 

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். 
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும். 
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது. 
*** 
ஜொலி ஜொலிக்க... 
தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. 
உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா... 
இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷ’னில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். 
இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம். 
*** 
வடுக்கள் நீங்க... 
முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்? 
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். 
இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது. 
*** 
கருமையை விரட்டியடிக்க.... 
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்... 
1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். 
வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

Saturday, March 29, 2014

மிளகு

தென்னிந்தியாவில் கேரளம், குடகு, மைசூர் பிரதேசங்களில் அதிகம் விளைகின்றது. மலேசியா, சிங்கப்பூர், அஸ்ஸாம், கூச் பீஹார் பிரதேசங்களிலும் விளைகிறது. மலபார், தலைச்சேரி ஆகிய கேரள இடங்களில் விளையும் மிளகிற்கு மதிப்பு அதிகம்.
மிளகு, வெள்ளை மிளகு, வால் மிளகு என மூன்று வகைப்படும். மிளகை ஜலத்தில் ஊரவைத்துத் தேய்த்து மேல் தோலை நீக்கி உலர்த்தி எடுப்பது வெள்ளை மிளகாகும். மிளகிலுள்ள காரம் பெரும்பாலும் அதன் தோலிலுள்ளது. அதை நீக்குவதால் அதன் காரம் குறைந்துவிடுகிறது. ஆகவே குறிப்பிட்ட நோய்களில் மிளகைவிட இதுவே ஏற்றதாகிறது. வால் மிளகு மைசூரிலும், ஜாவா ஸுமத்ரா தீவுகளிலும் அதிகம் பயிராகின்றது. இதுவும் மிளகைப் போல கொடி இனம் தான். காயின் காம்பு அதனுடன் சிறிதளவு ஒட்டிக்கொண்டு வால் போல் அமைந்துள்ளதால் வால்மிளகு என்று பெயர் ஏற்பட்டது. இதற்கு மெல்லிய தோல், தைலப்பசை அதிகம். இதன் உலர்ந்த முதிராத காய் வால் மிளகாக நமக்குக் கிடைக்கிறது.
மிளகின் கொடி தென்னை பாக்கு முதலிய மரங்களில் படர்ந்து வளர்கிறது. வெற்றிலை போன்ற இலை. இதன் காய் பச்சை நிறம். பழுத்ததும் சிவந்தும், காய்ந்ததும் கருத்தும் காண்கிறது. ஆனி ஆடியில் பூத்துப் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் காய்கிறது.
சுவையில் காரமானது, எளிதில் ஜீர்ணமாகிவிடும். ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. ஜீர்ணமான பிறகும் காரமான சுவையுடன் கூடியது. நல்ல சூட்டை தரக்கூடியது. பச்சைக்காய் ஜீரணமாகும் போது இனிப்பாக மாறுகிறது. அதனால் உஷ்ண குணம் குறைவு.
மிளகின் செயல்பாடுகள்
1. மிளகின் உஷ்ணமான வீர்யத்தினால் வாத தோஷத்தையும், காரம், உலர்த்தும் தன்மை மற்றும் ஊடுருவிச் செல்லும் தன்மையால் கபத்தையும் குறைக்கக் கூடியது.
2. வெளிப்புற உபயோகம்: தோல் நீக்கிய மிளகை பாலுடன் அரைத்து உடலில் தேய்த்து ஸ்நானம் செய்தால் தோலின் அரிப்பு குறைந்து விடும். நீர் கோர்வை, முன் மண்டைத் தலைவலி, மூக்கின் மேற் பகுதியில் அரிப்பது போன்ற உணர்ச்சி முதலியவைகளில் மிளகைப் போட்டுக் காய்ச்சிய எண்ணெய்யைத் தேய்த்து வெயில் ஏறுவதற்கு முன் ஸ்நானம் செய்து புளியில்லாப் பத்தியத்துடன் வெய்யில் கொள்ளாமலிருக்க குணம் கிடைக்கும். பல்கூச்சம், எகிர் வேக்காளம், சீழ், வலி இவைகளில் மிளகுத்தூள், வெங்காயம், உப்பு இம்மூன்றையும் அரைத்துத் தலையில் புழுவெட்டுள்ள இடத்தில் பூசிவர அங்கு முடிமுளைக்கும். வெள்ளை மிளகை பால்விட்டரைத்துச் சுடவைத்துத் தலையில் தேய்த்து வருவதுண்டு. எண்ணை தேய்த்துக் கொள்ளமுடியாதவர், கடும் நோய்வாய்ப்பட்டு எழுந்தவர், எண்ணெய் ஒத்துக் கொள்ளாதவர் இவ்விதம் பால் மிளகு தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். வால்மிளகைப் பன்னீரில் அரைத்துத் தலையில் மெல்லிய தாய்ப் பத்துப்போட தலைவேதனை குறையும். பல்வலி குறைய இதன் தூளும் தைலமும் சிறந்தது. வாய் நாற்றம், பற்களில் சீழ்ரத்தம் வடிதல், எகிர் வீக்கம் இவைகளில் வால் மிளகுத்தூள் சேர்ந்த பற்பொடி நல்ல குணம் தரும்.
3. நாடி நரம்புகளில்: மிளகுத்தூளை சாப்படுவதால் நாடி நரம்புகளில் சுறுசுறுப்பைக் கூட்டி பலத்தையும் தரும்

4. ஜீரண உறுப்புகளில்: காரம், உஷ்ணம், தீக்ஷ்ண குணங்கள் காரணமாக உணவில் சேரும் போது நல்ல பசியைத் தூண்டி, உணவை ஜீரணிக்கச் செய்வதும், ருசியைத் தூண்டுவதும் இதன் முக்கியச் செயலாகிறது. உமிழ்நீரை அதிகம் பெருக்குவதால் சுவை உணர்வு அதிகமாகிறது. கல்லீரல் குடல் சுறுசுறுப்புடன் இயங்கும். ஜீரகமும் மிளகும் உப்பும் சேர்ந்து பொடித்துச் சாதத்துடன் சாப்பிடவதுண்டு. வயிற்றில் அஜீர்ணம் மிக்க நிலையில் வயிற்றுக்கனம் குறையும் ஜீர்ணசக்தி பெருகவும் இதன் உபயோகம் வயிற்றில் ஜீரணமில்லாமல் போக்கு அதிகமாக இருக்கும்போது மிளகை நல்லெண்ணெய்யில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதும், சாதத்தில் போட்டுப் HCP நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுவதும் உண்டு.
மிளகு 25 கிராம் சோம்பு 50 கிராம் இரண்டையும் தூள் செய்து வெல்லம் 150 கிராம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை சாப்பிட்டு வர வயதானவர்களுக்கும் இளைத்தவர்களுக்கும் ஏற்படும் மூலம் குணமாகும்
5. ரத்த ஓட்டத்தில்: இருதயம் பழுதடைந்து மெதுவாக வேலை செய்கையில் மிளகுத்தூள் உணவில் சேர்ப்பதன் மூலம் இருதயம் சுறு சுறுப்படைந்து ரத்த ஓட்டத்தை உடலெங்கும் சீராக்குகிறது.
6. சுவாஸ நாளத்தில்: தொண்டை மூக்கு சதை வளர்ச்சியில் மிளகைத்தூள் செய்து தேனில் குழைத்து நடுவிரலில் தோய்த்து தொண்டையினுள் தடவ உள்நாக்கு தொங்குதல் குறையும். அதனால் ஏற்படும் இருமல் கமறல் குறையும். டான்ஸில் சதை வளர்ச்சியில் இதைத் தடவி வரலாம். மூக்குச் சதை அடைப்பு, கட்டிச்சளி அடைப்பு, முன் மண்டை வேக்காளம், நீர்க்கோவை, தலைவலி இவைகளில் ஊசி முனையில் மிளகைக் குத்தி அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி உறிஞ்ச அடைப்பு நீங்கும், வலி குறையும். வால் மிளகு நல்ல மனமுள்ளது. பக்ஷணங்கள், தொண்டை மருந்துகள் இவைகளில் இதற்கு அதிகம் உபயோகம். தொண்டை வரண்டோ, வெந்தோ, அடைபட்டோ, குரல் கம்மி வந்தபோது நல்ல நெய்யில் பொறித்த வால்மிளகுடன் பனங்கற்கண்டு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கத்தக்காம்பு, இவை சேர்த்து மாத்திரை செய்து சாப்பிடுவதுண்டு.
7. சிறுநீர்ப் பாதையில்: சிறுநீர் தடங்கலில் மிளகை உணவில் சேர்ப்பதால் தடங்கல் இல்லாமல் பெருகுமாதலால் உடம்பில் மப்பாலும் சுறுசுறுப்பின்மையாலும் ஏற்படும் கனம் அசதி குறைந்து லேசாக இருக்கும் உணர்வு காணும். வால் மிளகைப் பசுவின் பாலில் ஊற வைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த்துவார வேக்காளம் குறையும். இளநீரில் கலந்தும் சாப்பிடுவதுண்டு. வெள்ளை வெட்டை நோயுள்ளவர் இத்துடன் படிக்காரத்தைப் பொரித்துச் சேர்த்துச் சாப்பிடுவர்.
8. பிறப்பு உறுப்புகளில்: ஆண்மையை தூண்டிவிடும் சக்தி உடையது. மாதவிடாய் கோளாறுகளில் எள்ளு கஷாயத்தில் மிளகை தூள் செய்து வெல்லம், நெய்யுடன் கலந்து சாப்பிட மாதவிடாய் சீராகி சரியான சமயத்தில் உதிர போக்கு ஏற்படும்.
9. தோல் வியாதியில்: காணாக்கடி போன்று உடலில் தடிப்புடன் வரும் பல அலர்ஜித் தடிப்புகளில் வேளைக்கு 5-7-9-11-13 என்று கிரமமாக எண்ணிக்கையை அதிகமாக்கி மிளகைச் சாப்பிட்ட வர பித்தம் சீரடைந்து தடிப்பு குறைந்துவிடும். காணாக்கடிக்கு மந்திரிப்பவர்களும் மிளகையே மந்திரித்துக் கொடுப்பர். எல்லா விஷயங்களையும் முறிக்கும் சக்தி இதற்கு உண்டு. விஷ மாற்று மருந்துகளில் முக்கியமானது.
10. ஜ்வரத்தில்: மிளகையும் துளசியையும் கடித்துமென்று சாப்பிடக் குளிருடன் வரும் முறை ஜ்வரத்தில் உடன் நிற்கும்.
உடலில் உள்ள நாளங்களில் உள்ளே படிந்திருக்க அழுக்குகளில், மிளகை உணவாக உட்கொள்வதின் மூலம் அதன் ஊடுருவும் தன்மையால் இவ்வகை அழுக்குகள் உடைத்து வெளியேற்றுகிறது. இன்று மருத்துவ உலகம் கூறி வரும் கொலஸ்ட்ரால், ரத்தக்கட்டிகள், கொழுப்புக்கட்டிகள் ஆகியவைகளால் ஏற்படும் அடைப்புகளை நீக்க மிளகு பெரும் பங்காற்றுகிறது. குடல் கிருமிகளில் மிளகுத்தூள் வாய்விளங்கம் கஷாயத்துடன் சாப்பிட ஏற்றது.

Friday, March 28, 2014

அழகான பாதத்திற்கு சில குறிப்புகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.

இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்கஎலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .
நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

Thursday, March 27, 2014

இயற்கை உபாதை

வெகுதூரப் பயணங்களை இன்று நம்மால் பேருந்தில் கூட செய்ய முடிகிறது. பயணத்தில் களைப்பை அறியாமலிருப்பதற்கு Push Back சீட் வசதியுடன் Hitech பஸ்களும் இரவில் செல்வதால் ரயிலில் பயணம் செய்ய டிக்கட் கிடைக்காதபோது அதுபோலுள்ள பஸ்களில் செல்கிறோம். இயற்கை உபாதைகளான மலம் மற்றும் சிறுநீர் ஆகியவை வெளியில் வர உணர்ச்சி உண்டான சமயத்தில் பயணத்தின் நடுவே உடனடியாக வெளியேற்ற முடியாமல் அவதியுற வேண்டியுள்ளது. அரசு விரைவுப் பேருந்தில் கண்டக்டரிடம் இயற்கை உபாதைகளை நீக்குவதற்காக கெஞ்ச வேண்டியுள்ளது. அவர் எரிந்து விழுகிறார். இதற்கு பயந்து பலபேர் மல மூத்திரங்களை அடக்கிக் கொள்கின்றனர். இப்படி அடக்கப்படும் இவைகளால் உடல் உபாதைகள் பெரும் வேதனைகளை அளிக்கின்றன. மறுநாள் காலை ஊர் போய்ச்சேர்ந்தாலும் மலம் சரியாக வெளியேறுவதில்லை. இதற்குக் காரணம் உணர்ச்சி உண்டான சமயத்தில் வெளிப்படுத்தாமல் அவைகளை அடக்கியதால் வந்த வினையாகும். மலத்தை அடக்குவதால் தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், புலன்களின் சோர்வு, வயிறு உப்புசம், அஜீர்ணம், ருசியின்மை, வாய்நாற்றம், குமட்டல், வாந்தி, சிறுநீர் கீழ்வாயுக்கள் பிரியாமல் கட்டுப்படுதல் போன்றவைகள் ஏற்படுகின்றன. மலச்சிக்கல் உண்டாகும் விஷத்தன்மை உடலில் ஊடுருவுவதால் உடனே உண்டாகக்கூடிய தொந்தரவுகள் இவை சிறுநீரை தடை செய்வதால் நாளடைவில் நீர்க்கட்டு, கல் அடைப்பு, மூட்டுகளில் வீக்கம், வலி, அடிவயிற்றுலிம் நீர்த்தாரையிலும் வலி, கீழ்க்குடலில் வாயுக்கட்டு, தலைவலி போன்ற நோய்களும் ஏற்படுகின்றன, ஆதலால் எந்த சமயத்திலும் சிறுநீரை அடக்கவே கூடாது. இவ்வகை உபத்திரவங்கள் ஒருநாள் மட்டும் அடக்கியதால் வருவதற்கில்லை என்றாலும் சுபாவத்திலேயே சிலருக்கு இயற்கை உபாதைகளை தடைசெய்யும் குணமிருந்தால் ஏற்படும்.
பஸ் பிரயாணம் முடிந்து காலையில் வீட்டுக்குச் சென்றவுடன் பல் தேய்த்து நாக்கை வழித்து முகம் அலம்பிய பிறகு ஒரு பெரிய டம்ளர் வெந்நீர் ஜலத்தை மெதுவாய் பருகவும், இரண்டு மணிநேரத்திற்குப் பறிகு இரண்டு பூவன் வாழைப்பழம் உருகிய நெய்யில் தோய்த்து சாப்பிட்டு ஒரு சிறிய டம்ளர் காய்ச்சிய பாலைக் குடிக்கவும். காபியை விரும்புவர் சிலர். அவர்கள் பாலில் சிறிது டிக்காக்ஷன் கலந்து சூடாகக் குடிக்கவும். காலைச் சிற்றுண்டி என்ற பெயரில் இட்லி, தோசை போன்ற மாவுப் பண்டங்களை தவிர்த்து காலை 10 மணிக்குள் சூடான சாதத்துடன் நெய் கலந்து பச்சைக் கறிகாய்கள், பருப்பு, ரசம், தண்ணீர் விட்டு விளாவிய மோர் சேர்த்து சாப்பிடலாம். மதியம் உண்ட உணவு நன்கு ஜெரித்தவுடன் ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை அல்லது தக்காளி ஜுஸ் குடிக்கலாம். இளநீர் குடிப்பதும் மிகவும் நல்லது. இரவு உணவை அதிகம் தாமதிக்காமல் 7 முதல் 7.30 மணிக்குள் காலை வகை உணவுபோல சாப்பிட வேண்டும். ராத்திரி சாப்பாட்டில் புளி - புளிப்பு சேர்ந்த வஸ்து இல்லாதபடி பச்சைக் கறிகாய் கூட்டு சாதத்துடன் சாப்பிடலாம். பால் அன்னம் அல்லது விளாவிய மோர் சாதம் சாப்பிடவும் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும் புழுங்கலரிசி அன்னம், கோதுமை சப்பாத்தி ஆகியவை இரவில் சாப்பிடுவது உத்தமம். இவ்வகை உணவு பழக்கத்தினால் மலச்சிக்கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கலாம்.
காரமான உணவுகளை தவிர்த்து இணிப்புப் பண்டங்களைச் சேர்த்து, பழவகைகள், பூசணிக்காய், பரங்கிப்பிஞ்ச, சுரக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, உளுந்து, பயிறு. பால், மோர், கஞ்சிகள், இளநீர், தேங்காய், சுத்தமான ஜலம் இவைகளை உட்கொண்டால் சிறுநீர் தாராளமாய் சேர்ந்து சுகமாய் இறங்கும்.
அஷ்டாங்க சங்கிரஹம் என்னும் ஆயுர்வேத நூலில் சிறுநீர் வேகத்தை அடக்கும் துர்பழக்கம் உள்ளவருக்கு சிறிது நாட்களில், கழிக்கும்போது சிறுநீர் சிக்கிறத்தில் இறங்காமல் தங்கித் தங்கி மெதுவாய் இறங்கும் தொந்திரவு வந்துவிடும் என்றுகூறுகிறது. இந்த கெடுதியை போக்குவதற்கான எளிய வழிமுறையும் அந்நூல் எடுத்துரைக்கின்றனது, உருக்கின நெய்யை பசியின் அளவைப் பொருத்து ஆகாரத்திற்கு முன்பு ஒருதரம் குடித்து. அந்த ஆகாரம் ஜீரணமான உடன் திரும்புவம் முன் குடித்த நெய்யின் அளவை இருமடங்காக குடிக்க வேண்டும். சுத்தமான பசுவீன் நெய்யை இதற்காக உபயோகிக்கலாம், ஆயுர்வதே மருந்து கடைகளில் 'வஸ்த்யாமயாந்தகம்கிருதம்' என்றபெயரில் மூலிகைகள் இட்டு காய்ச்சிய நெய் கிடைக்ம். அது இந்த சிக்சை முறைக்கு உத்மமமான மருந்தாகும். ஒரு வார உபயோகத்தில் சிறுநீர் இறக்கம் சுத்தமாய் சீர்பட்டுவிடும்.
இயற்கை உபாதைகளை தடுக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சிறுநீரும் ஒருவகையில் மலக்கழிவுதான். அதனால் சிறுநீர் கழித்த பிறகு அதுவரும் பாதையின் துவாரத்தை குளிர்ந்த சுத்தமான தண்ணீர் விட்டு அலம்ப வேண்டும். சிறுநீர் துவாரத்தை அலம்பும் பழக்கம் இன்று வெகுவாக் குறைந்தவிட்டபடியால் பலவித நோய்கள் தாக்குவதற்கு காரணமாகிவிட்டது.

Wednesday, March 26, 2014

அழகு மேனி பெற சில டிப்ஸ்

கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில.
கண்கள்
ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
ஜொலி ஜொலிக்க
தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.
உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா – இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.
இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.
வடுக்கள் நீங்க
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை. இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.
இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
கருமையை விரட்டியடிக்க
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்.
1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது – கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை
தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால்,  அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.
உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ. எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.
அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.
ஆரஞ்சு ஃப்ருட் பேக்
வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

Tuesday, March 25, 2014

பப்பாளி - அழகு குறிப்பு

பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்
. அம்மை வடுக்களை அழிக்க சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

Monday, March 24, 2014

உணவில் கீரையும் கறிகாய்களும்

கறிகாய்கள் உணவில் ஒரு முக்கிய கூட்டுப்பொருளே தவிர தனித்த உணவாகவோ அதிக அளவிலோ சாப்பிட ஏற்றதல்ல. அன்னத்திற்கு ருசிதரவும் ஜீர்ணத்திற்கு உதவவும் ஏற்றது.
கறிகாய், கீரை போன்றவற்றை நன்கு அலம்ப வேண்டும். பிறகு நறுக்கி வேகவைத்து தண்ணீரை பிழிந்து விட்டு எண்ணையிட்டு வதக்கி மிளகு, உப்பு, சுக்கு, பெருங்காயம் முதலியவைகளை சேர்க்க வேண்டும். அப்படி செய்வதால் கறிகாய், நன்கு தானும் ஜீர்ணமாகி மற்றவைகளையும் ஜீர்ணமாகச் செய்யும். இன்று பல ஜீர்ண கோளாறுகள், ஜீர்ண உறுப்பு நோய்கள் வருவதற்குக் காரணம் உணவுப் பொருளை தேர்ந்தெடுப்பதிலும், உணவின் பக்குவ முறையிலும் ஏற்கும் முறையிலும் தொடர்ந்து தவறான வழியில் செல்வதால்தான். உடல் பாதுகாப்பிற்காக பல சமையல் குறிப்புகளையும், விளம்பரங்களையும் இன்று நாம் பத்திரிக்கை மற்றும் டி.வியிலும் காண்கிறோம். ஆனால் நிலைத்த ஆரோக்கியம் பெற புதிய வழிகளை கண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை. பல்லலாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர் கையாண்ட முறைகளே போதுமானது.
வாக்படர் இவ்வாறு குறிப்பிடுகிறார் -
'பத்ரே புஷ்பே பலே நாலே கந்தே ச குருதா க்ரமாத்' என்ற.
இலை (கீரை) , பூ, காய், தண்டு, கிழங்கு எனக் கறிகாய்களை ஐந்து விதமாக பிரிக்கலாம். அவைகளில் இலை சீக்கிரத்திலும் எளிதாகவும் ஜீர்ணமாகக்கூடியது. அதைவிட முறையே பூவும், காயும், தண்டும், கிழங்கும் ஜீர்ணமாகத் தாமதமாகக் கூடியவை. ஆனால் இதிலும் விதிவிலக்குகள் உண்டு. உதாரணத்திற்கு முள்ளங்கியை கிழங்காகக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது பூமிக்கு அடியில் விளைவதால். மிக சுலபமாக ஜீர்ணிக்கும் இலையை விட முள்ளங்கி விரைவில் ஜீர்ணித்து விடும்.
சாப்பிட்ட உணவு நான்கு விதங்களாக பிரிகிறது.
1.இயற்கையாகவே குடலில் வளரும் கிருமிகளால் உணவு பதனழியாமல் மலத்தில் கெட்டவாடை வராமல் வெளியேற்றும். அவைகளுக்கு ஒரு பங்கு.
2. உணவை ஜீர்ணம் செய்யும் பாசகாக்னி எனப்படும் ஜாடராக்னிக்கு - உணவின் ஒரு பங்கு எரிபொருளாகிறது.
3. தாதுக்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் உணவு சத்தாக மாறி ஒரு பங்கு செல்கிறது.
4. மீதியுள்ள கிட்டம் எனப்படும் மலமாக வெளியேறுகிறது.
இந்த நான்கு நிலைகளிலும் உதவும்படி உணவுப் பொருள்களை அமைத்துத் தயாரிக்கப்படுவதே பூர்ண உணவு. கறிகாய்கள் இதை செய்வதற்கு பெரும் உதவி செய்கின்றன. ஜீர்ண கிருமிகளுக்கு உணவாகும், மலத்திற்கு உருவளித்து எளிதில் வெளியேறச் செய்வதிலும் கறிகாய்கள் பயன்பெறுகின்றன.
நிறைய கறிகாய்கள் சாப்பிட வேண்டும், வேக வைக்காமல் பச்சையாகவே (ஆடு மாடுகள் உண்பதுபோல) சாப்பிட்டால் அதிலுள்ள உணவுச் சத்தை நாம் முழுமையாக பெறமுடியும். ஆகவே பச்சையாகவே, பாதி வேகவைத்தோ சாப்பிடவும். கறிகாய்களை வேக வைத்து நீரில் சத்து இறங்கியிருக்கும். அதனால் அதையும் விட்டு வைக்காமல் சேர்த்தே சமைத்து விடவும் போன்ற கருத்துகள் நவீன விஞ்ஞானிகள் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால் ஆயுர்வேதம் வேறு விதமாக தன்கருத்துகளை தெரிவிக்கிறது.
1.கறிகாய்களை அதிக அளவில் உணவில் சேர்க்கக்கூடாது.
2. நன்கு வேக வைத்த கறிகாய்களையே உண்ண வேண்டும்.
3. கறிகாய்கள் வெந்த ஜலத்தை பிழிந்து அகற்றுவதே நல்லது என்று இன்றைய கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துகளை கூறுகிறது.
பொதுவாக கறிகாய்களுக்கு சில குணங்களுண்டு.
1. வயிற்றிலுள்ள சூட்டை குறைத்து, மலம், மூத்திரம் இவைகளின் அளவை அதிகரிக்கும்.
2. நார்ச்சத்து மிகுந்த காய்கள் குடலில் தாமதித்து வெளியேறக்கூடும். சில சமயங்களில் இது உதவக்கூடும். ஆனால் தாமதித்து வெளியேறுவதால் மற்ற உணவுப் பொருள்களில் நெகிழ்ச்சியும் வெளியேற்றத்திலும் பாதகம் விளைவிக்கக் கூடிய வாய்ப்பினால் பொறுமல், கனம், அசதி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இந்த தாமதத்தைத் தவிர்க்கவே கறிகாய்களை பொடிபொடியாக நறுக்குவது, வேக வைப்பது, வேக வைத்த தண்ணீரை பிழிந்து கொட்டி விடுவது, கறிகாயின் வரட்சியை தவிர்க்க எண்ணெய் சேர்த்து வதக்குவது, தாமதத்தைக் குறைக்க சுறுசுறுப்பு தருபவைகளான கடுகு, பெருங்காயம், புளிப்புச்சாறு, மிளகு, இஞ்சி கருவேப்பிலை, ஜீரகம், ஓமம், சுக்கு போன்றவைகளை சேர்ப்பது. கீரைக்குத்தான் இதுபோன்ற பக்குவமுறை மற்ற கறிகாய்களைவிட அதிகம் தேவைப்படுகிறது.
உணவை ஜீர்ணம் செய்து அந்த உணவின் பூர்ணமான சத்து நம் உடலில் சேர்ப்பதே ஜீர்ணத்தின் பலன். கறிகாய் வெந்த நீரை பிழிந்து விட்டு கறிகாய் மட்டும் என்ணெயுடன் வதக்கவேண்டும் என்பதின் தாத்பர்யம் அது எளிதில் ஜீர்ணமாக்குவதற்காகத்தான். சாதத்திலுள்ள கஞ்சி எளிதாக ஜெரிப்பதில்லை. அதனால அதை வடித்து விட்டு சாதத்தை மட்டும் உண்கிறோம். உபவாசம் இருப்பவர்களுக்கு பசி அதிகமிருப்பதால் அவர்கள் இது போல் தடிப்பான கஞ்சிகளை குடிக்கலாம். Horlicks, Boost, Complan போன்றவை சத்து தரும் என்றெண்ணி ஜீர்ண சக்தி குன்றியவர்கள் பாலுடன் அருந்துவதால் பயனேதுமில்லை.
பசியின் அளவை பொருத்தே உணவை உட்கொள்ளும் திறமைசாலிகளுக்கு மட்டுமே ஆரோக்யத்தின் சுகத்தை அடைய முடியும். ஆயுர்வேதத்தின் அறிவுரைகளை ஏற்று உணவை பாகம் செய்து சரியான அளவில் சாப்பிடும் வழக்கத்தை குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லிதர வேண்டும் .ஏனெனில் American pizza Corner, Chinese Noodles இன்று அதிக அளவில் மாணவர்களை கவர்ந்துள்ளன. மேலோட்டமாக பார்க்கும்போது ஆர்வத்தை அவை தூண்டினாலும் உண்மையில் நம் முன்னோர்கள் நமக்களித்த உணவின் பாகமுறைகளை நாம் என்றென்றும் மறக்கலாகாது.

Sunday, March 23, 2014

ஆவாரம் பூ அழகு குறிப்புகள்

உடலுக்குப் பொன் நிறத்தைக் கொடுத்து நல்ல மினுமினுப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது ஆவாரம் பூ. 

• நெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் இவையெல்லாம் அழகைக் கெடுத்துவிடும். இதற்கு 100 கிராம் ஃப்ரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, ஓசை வரும் வரை காய்ச்சி, 100 கிராம் பாதாம் ஆயிலைக் கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்பு தடவி வர , ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும் மறைந்துவிடும். 

• முகம், கைகளில் பனிக்காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக உண்டாகும் மங்கு,தேமல் போன்றவற்றை போக்கி அழகைக் கூட்டுகிறது ஆவாரம் பூ. ஃபிரெஷ் ஆவாரம் பூ - 100 கிராம், வெள்ளரி விதை - 50 கிராம், கசகசா - 50 கிராம் இந்த மூன்றையும் அரைத்துக் கொள்ளுங்கள். 

இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு பால் சேர்த்து, மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் வாரம் இருமுறை பேக் போடுங்கள். காய்ந்ததும் கழுவினால் ஒரே மாதத்தில் அத்தனையும் மறைந்து, உடலின் ஒரிஜினல் நிறம் பளபளக்கும். 

• உடம்பில் தேவையில்லாத இடங்களில் முடி வளரும்போது, கருப்பான தோற்றம் ஏற்படும். இதற்கு லேசர் ட்ரீட்மென்ட் செய்து கொள்ளும்போது தோல் தடித்து மேலும் கருப்பாகிவிடும். 


இத்தகைய பிரச்னைக்கும் வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கு-250 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ - 100 கிராம், பூலான்கிழங்கு - 100 கிராம் ஆகியவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்தப் பவுடரை தேய்த்துக் குளிக்கும்போது தேவையில்லாத முடி உதிர்ந்து சருமம் பளிச்சென மின்னும்.

Saturday, March 22, 2014

ஆரஞ்சு பழ அழகு குறிப்புகள்...

• உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து

அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். தலை அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும். 

• ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். 

• சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும். அதற்கு வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும். 

• ஒரு சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருக்கும். அவர்கள் ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது. 

• ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
-

Friday, March 21, 2014

பயனுள்ள இணையதளங்கள்...!



சான்றிதழ்கள் :-

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.tnpsctamil.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

http://www.tettnpsc.com/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do