I'm always "Squabble with Rife"

Sunday, February 9, 2014

சமையல் குறிப்புகள்

* பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி          வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
*   வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த                     
        நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும்.    
    இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
*     சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால்      
    அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
*     சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் 
    கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
*     தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு 
     சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் 
     கொள்ளலாம்.
*     உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை 
     மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் 
      மொறு  மொறுவென்று ருசியாக இருக்கும்.
*     கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் 
       பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
*     ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து 
     செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
*     தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது 
     தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
*     பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை 
       சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல்                   போய்விடும்.
 *   இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற      
    சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
 *    தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு 
    இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி     
    செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது      
    தேங்காயும் உதிராமல் இருக்கும்.
*     மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை 
     சேர்த்து வறுக்கவும்.
*     பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் 
    சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
*     வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் 
     பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு 
     நறுக்கவேண்டும்.
*     தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து 
    ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென 
     இருக்கும்.
 *    எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் 
     சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் 
    கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக     
        இருக்கும்.
*     உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் 
   இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால்     
  உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
*     தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக 
  அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
 *    துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு 
        கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி                
               மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
*     நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை 
    போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.
*     கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் 
   சேர்த்துச் சமைக்க வேண்டும்.
*     குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி 
      சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த     
      சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

*   முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் 
   வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் 
    வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு 
       வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

உபயோகமான சில சமையல் குறிப்புகள்
சில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். இவை படித்ததில் பிடித்தது. நானும் இனிமேல் தான் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும்.
* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.

* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.

* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.

* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.

* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.

* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே?????? )


* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.

No comments:

Post a Comment