I'm always "Squabble with Rife"

Thursday, August 28, 2014

பிரமியபூண்டு

 பிரமியபூண்டு சுவையில் துவர்ப்பு, கசப்பு மற்றும் இனிப்பு சுவை உடையது. குளிர்ச்சியான வீரியம் உடையது. மலத்தை இளக்கிப் போக்கும், புத்திசக்தியை வளர்க்கும், வலிநிவாரணி, பசியை தூண்டிவிட்டு செரிக்காத வயிற்றிலிருக்கும் உணவை செரிக்கவைக்கும். மேலும், மூட்டுவீக்கத்தைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும், இருதயதுர்பலத்தைப் போக்கும், மூச்சுக்குழாயை விரிவுபடுத்தும், சிறுநீரை தாராளமாக  வெளியேற்றும்.
கபவாதநோய்களை போக்கக்கூடியது. காக்காய் வலிப்பு, புத்திபேதலித்தநிலை, மறதிநோய் போன்றவற்றை குணப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம், மஹோதரம், வாயுத்தொல்லை, மூச்சிரைப்பு, தோல் உபாதைகள், குஷ்டம், வெண்குஷ்டம், ஜனன உறுப்பு நோய்கள், யானைக்கால் வியாதி, மாதவிடாய் கோளாறுகள், காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஆகியவற்றை நீக்கக்கூடியது. 
ஆயுர்வேதத்தில் பிரம்மியை மூலப்பொருளாகக் கொண்டு பிரம்மி தைலம், பிரம்மி க்ருதம் போன்ற அறிவை வளர்க்கக்கூடிய சிறந்த மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment