Thursday, July 17, 2014
நண்டு பீடத்தில் விநாயகர்
திருவெண்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவி லுள்ளது கீழைத் திருக்காட்டுப் பள்ளி. ஈசன் ஆரண்யேஸ்வரராகவும் அம்பிகை அகிலாண்ட நாயகியாகவும் திருவருள் புரியும் திருத்தலம். இந்திரன் தன் பாவம் தீர ஈசனை பிரதிஷ்டை செய்த தலம் இது. இத்தல ஈசன் காட்டழகர் என்றும் வணங்கப்படுகிறார். சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் ஒருவனால் வணங்கப்பட்ட விநாயகர், நண்டு விநாயகர் என வணங்கப்படுகிறார். விநாயகரின் பீடத்தில் மூஷிகத்திற்குப் பதில் நண்டு உள்ளது, சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இத்தல தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்களுடன் ராஜயோக தட்சிணாமூர்த்தியாக போற்றப்படுகிறார். இவரை பூஜித்தால், இவர் அருளால் பதவி உயர்வைப் பெறலாம். இங்குள்ள பரமேசலிங்கத்தை பூஜிக்க 100 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment